தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Saturday, January 29, 2011

நகைச்சுவை விருந்து

நண்பர் அனுப்பிய மெயிலில் இருந்து இதை பதிவிடுகிறேன்.இந்த ஜோக்ஸ் வேறு தளத்தில் வந்திருந்தால் மன்னித்து விடவும்.படிக்காத நண்பர்களுக்காக.     
True GK Facts: ** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை. ** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை. ** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை. ** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
**********

பேச்சாளர் ஒருவர் பேச்சைத் தொடங்கினார். பேச விடாமல் கூட்டத்தில் பலர் அவர் பேச்சில் குறுக்கிட்டுப் பேசிக் கொண்டே இருந்தனர். 
பொறுமை இழந்த அவர் இங்கே முட்டாள்கள் பலர் இருக்கிறோம். ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டாள் பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.
உடனே கூட்டத்திலிருந்து ஒரு குரல், பேச்சாளரைப் பேச விடுங்கள் என்று ஒலித்தது.
**********
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 ! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !! 
**********
அந்த அறுவைத் திரைப்படத்தை ஒருவர் தொடர்ந்து பத்து நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 
வியப்பு அடைந்த திரையரங்க மேலாளர், "சார்! உங்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கா? நாள் தோறும் வருகின்றீர்களே?" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தப் படம் சரியான போர்தான். 
இதில் ஒரு காட்சியில் கதாநாயகி குளிக்கறதுக்காக ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடறா. அப்ப திடீர்னு அந்த வழியா ட்ரெயின் வருது.  அது போனவுடன் பார்த்தால் அவள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளாவது அந்த ட்ரெயின் லேட்டா வராதா என்பதற்காகத்தான்    நாள்தோறும் வருகிறேன்" என்று விளக்கம் தந்தார் வந்தவர்.

**********
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது... கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
**********
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்! 1. சிரிப்பு 2. அழகு 3. நல்ல டைப் 4. கொழந்த மனசு... 5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
**********
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
**********
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
**********

கடையில் பல்லி மிட்டாய் மேல் தட்டிலே வைக்கப்பட்டு இருந்தது. கடைக்கு வந்த சிறுவன், நாலணாவிற்குப் பல்லி மிட்டாய் என்று கேட்டான்.
கடைக்காரர் ஏணியில் ஏறி மிட்டாய் பாட்டிலைக் கவனமாகக் கீழே கொண்டு வந்தார். அவனிடம் பல்லி மிட்டாய் தந்தார். மீண்டும் ஏணியில் ஏறிப் பழைய இடத்தில் பாட்டிலை வைத்தார்.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன், நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரர் வழக்கம் போல ஏறி அவனுக்கு மிட்டாய் கொடுத்து விட்டுப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்தார்.
மூன்றாவதாக வந்த பையன் நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏணியில் ஏறி பாட்டிலைக் கீழே கொண்டு வந்தார். மீண்டும் பாட்டிலை மேலே வைக்கவில்லை.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்தான். அவனிடம் கடைக்காரர், உனக்கும் நாலணா பல்லி மிட்டாயா? என்று கேட்டார்.
இல்லை என்றான் சிறுவன். கடைக்காரர் ஏணியில் ஏறி அந்த மிட்டாய்ப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்து விட்டுக் கீழே இறங்கினார்.
பிறகு பையனைப் பார்த்து, இப்ப உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்குப் பத்துப் பைசாவுக்குப் பல்லி மிட்டாய் வேண்டும் என்றான் அவன்.
**********
தத்துவம் 2010 "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"! "கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!! இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....சும்மா தமாசுங்க...உடனே கோவமா.
**********

புதுப் படம் வெளியாகி இருந்தது. திரை அரங்கம் முழுமையும் நிரம்பி இருந்தது. உயர் வகுப்பில் நாகரிகமான பெண்மணியின் பக்கத்தில் அழுக்கு உடை அணிந்த சிறுவன் ஒருவன் அமர்ந்து இருந்தான்.
அந்தப் பையன் ஓயாமல் இருமிக் கொண்டும் அருவருக்கத்தக்க முறையில் சளியைச் சுற்றுப்புறமெங்கும் சிந்திக் கொண்டும் இருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்த பெண்மணி அவனைப் பார்த்து, நீ கைக்குட்டை வைத்து இருக்கிறாயா? என்று கேட்டாள்.
வைத்து இருக்கிறேன், ஆனால் முன்பின் அறிமுகம் இல்லாத யாருக்கும் நான் அதை இரவல் தருவது இல்லை, என்றான் அவன்
**********
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல? மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
**********


அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான். அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?" என்று கேள்வி கேட்கப் பட்டது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் போகலாம்" என்றனர்.
வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன் "என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.
அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி என்னிடம் பேசினார்கள்" என்றான்.

**********

சும்மா தமாசுக்கு   

Friday, January 28, 2011

பாரதியார் பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்...

பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒலி படைத்த பார்வை வேண்டும்
ஜனன தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

இடை வரும் பலவித தடைகளை தகர்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்

இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீஎன் யாரும் போற்றவேண்டும்

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

(மனதில் உறுதி வேண்டும்)

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படிப்பதை பூமி பார்க்க வேண்டும்

தூர்த்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மைஎன்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம்வேண்டும்

(மனதில் உறுதி வேண்டும்)
பாரதியார் பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

Tuesday, January 25, 2011

உஷார்.....எச்சரிக்கை பகுதி -2

மீண்டும் உங்களுக்காக ஒரு உஷார்.....எச்சரிக்கை பகுதி.
இதோ என் அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை கூறுகிறேன்.இதை படித்து உங்கள் வாழ்வில் இப்படி நடக்கமால் பார்த்து கொள்ளுங்கள்.   
சம்பவம் ஓன்று 
என் நண்பர் ஒருவர் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல சிறிது தூரம் பேருந்தில் பயணித்து விட்டு தில்லி ரயில் நிலையம் செல்ல ஆட்டோ ரிக்சா பிடித்து சென்று கொண்டுஇருந்தார்.
ஊருக்கு செல்வதென்றால் உங்களுக்கே தெரியும் எத்தனை உருப்படிகள் தூக்கி செல்வார்கள் என்று.அத்தனை சாமான்களை வைத்து கொண்டு செல்கையில் தில்லி வாகனங்கள் அதிகம் செல்லும் பாதையில் ஒரு ஓரம் ஆட்டோவை நிறுத்தி இந்தியில் தம்பி சாலையில் டிராபிக் அதிகமா இருக்கு என்னால இறங்கி தண்ணீர் பிடித்து குடிக்க இயலாது,இந்தா இந்த பாட்டிலில் தண்ணீர் பிடித்து வா என டிரைவர்  கூற பையனும் ஊருக்கு போற அவசரத்தில் தண்ணீர் பிடிக்க இறங்கினான்.அப்புறம் என்ன ஆட்டோ டிரைவர் லக்கேஜ்ஜுடன் கம்பியை நீட்டிவிட்டார். 
சம்பவம் இரண்டு   
"பெண்ணென்றால் பேயும் இறங்கும்"
மாலைபொழுது சாய்ந்து இரவு நேரம் நெருங்கும் வேளையில் நண்பர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தார்.அப்பொழுது இரு அழகான கால்சென்டர் செல்லும் இளம்பெண்கள் கையை அசைத்து லிப்ட் கேட்க நம்ம சாரும் இழிந்து கொண்டு ஐயோ பாவம் வண்டி கிடைக்கமால் இளம்பெண்கள் அவதிபடுவதை பார்த்து சார் இருவரையும் பின்னால் ஏற்றி சென்றுள்ளார்.
இருளான பகுதி வந்ததும் இருவரும் வண்டியை நிறுத்த சொல்லி உள்ளார்கள்.நம்ம தலைவரும் வண்டியை நிறுத்த அந்த இருபெண்ணும் ஹிந்தியில் மரியாதையாக கையில் உள்ள பணம்,மொபைல் அனைத்தையும் கொடுத்து விடு,இல்லேன்னா கையை பிடிச்சு இழுத்தான் என கத்தி ஊரை கூட்டி விடுவேன் என மிரட்டி உள்ளனர்.தலைவர் அலறி ஐயோ பொண்ணு கத்தினால் ஏன் என்று கேட்கமால் கூட இந்த ஊரில் அடிப்பாங்களே என கையில் உள்ளதை கொடுத்து விட்டு பைக்கில் பறந்து
விட்டார்.அன்றிலிருந்து வழியில் யார் லிப்ட் கேட்டாலும் கொடுப்பதில்லை.          
 உஷார்.....எச்சரிக்கை பகுதி-தொடரும்.... 

சும்மா தமாசுக்கு 

Monday, January 24, 2011

மனைவி கர்ப்பவாதியாக இருக்கும்போது கவனிக்க வேண்டியவை

ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருக்கும் போது தனது மகனுக்கு மொட்டை போடுவதோ,தனது முடியை வெட்டுவதோ,வீடு கட்ட ஆரம்பிப்பதோ,அஸ்திவாரம் தோண்டுவதோ,தூண் எழுப்புவதோ கூடாது.    
நகம் வெட்டுதல்,மலை ஏறுதல்,தூரதேசம் போகுதல் கூடாது..குழந்தை பிறந்த பத்தாவது நாளில் தனது முடியை வெட்டி கொள்ளலாம்.கர்ப்பிணிப்பெண் கடலில் குளிக்க கூடாது.கணவனும் கடலில் குளித்தல்,சிரார்த்த வீட்டில் சாப்பிடுதல்,தனது வீட்டில் திருமணம் செய்தல் இவை கூடாது.    
    
குழந்தை வேண்டி கடலில் நீராட செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமை கடலில் நீராடக்கூடாது.அமாவாசை,பௌர்ணமி,மாதப்பிறப்பு கூடாது.

Sunday, January 23, 2011

கடி... கடி..கடி...ஜோக்ஸ்

நண்பர் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்து 
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
*************
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..... 
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.... இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா
**********

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
**********
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
***********
நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை..... நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?.. நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
***********
மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா? b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
***********
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க... என்ன கொடும சார் இது?....
***********
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி... தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
***********
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
***********
நான் ஒண்ணு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா? பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க... ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?.... 

Thursday, January 20, 2011

வாழ்க்கை என்பது ......

வாழ்க்கையில் மூன்று முட்டாள் தனமான பருவங்கள் உள்ளது .
1 ) வாலிப பருவம் 
இந்த பருவத்தில் நிறைய நேரமும்,நிறைய உடல் பலமும் இருக்கும்.ஆனால் கையில் பணமிருக்காது.  
2 ) வேலை பார்க்கும் பருவம் 
இந்த பருவத்தில் பணமும்,உடல் பலமும் இருக்கும்.ஆனால் நேரமிருக்காது.
3 ) வயோதிக பருவம்
இந்த பருவத்தில் பணமும் ,நிறைய நேரமும் இருக்கும்.ஆனால் உடலில் பலமிருக்காது. 

சும்மா தமாசுக்கு 

Tuesday, January 18, 2011

வேடிக்கையான போலி பில் தயாரிக்க

நான் டெல்லியில் கடைவைத்த மாதிரி ஒரு பில்லை தயாரித்து உள்ளேன்.அதே மாதிரி மெடிக்கல் பில் மாதிரியும் தயாரித்து உள்ளேன் இதே மாதிரி நீங்களும் தயாரிக்க கீழுள்ள தளங்களுக்கு விரையவும்.



 மேலும் சில முறைகளை கீழுள்ள முகவரியில் கிளிக் செய்து செய்து பார்க்கவும். 

சும்மா தமாசுக்கு 

Sunday, January 16, 2011

நோய் விட்டு போக நல்ல சிரிங்க...


1 )ஒரு நண்பர் கஸ்டமர் கேருக்கு மொபைல் போனில் தனது குறையை கூறுவது போன்று உள்ள இந்த ஆடியோ ரெகார்டிங்கை கேட்டு சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது,நீங்களும் தரவிறக்கி கேட்டு பாருங்கள். 
 தரவிறக்க முகவரி :-Click Here
2 )மேலும் இளைய தளபதி விஜய் பற்றிய இந்த ரீமிக்ஸ் காமெடி ஆடியோவையும் கேட்டு பாருங்கள்.
தரவிறக்க முகவரி :- Click Here
3 )விஜய் பற்றி சன் நியூஸ்-ல் வந்த கவர் செய்தியை கேளுங்கள்.  
தரவிறக்க முகவரி :- Click Here
இதையும் கேட்டு பாருங்கள்:- Click Here
( நீங்கள் தரவிறக்கி நண்பர்களுக்கும் போட்டு காட்டவே பைலை நேரடியாக Upload செய்யாமால் தரவிறக்கம் செய்யம் படி அளித்துள்ளேன்.)  

சும்மா தமாசுக்கு  
இதுக்கு மேலயும் நீங்க சிரிக்கலன்ன பின்ன இப்படிதான் பண்ண வேண்டி இருக்கும்.

Saturday, January 15, 2011

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...


என் இனிய தமிழ் மக்களே ...
உங்கள் அனைவருக்கும் எனது பழனி உலகத்தின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


சும்மா தமாசுக்காக... இணையத்தில் இளைய தளபதி விஜய்யின் படங்களை கிண்டல் அடிக்காதவரே கிடையாது.
விஜய்யின் பொங்கலை காண:-  Click Here

Thursday, January 13, 2011

பெரியவர்களை வளர்ப்பது எப்படி ?

இணையத்தில் சுட்டவை ...